நீலகிரி மாவட்டம் உதகையில் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரின் ஓட்டுநர் உயிரிழந்தார். 5 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
உதகையை அடுத்த லவ்டேல் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 5 மாணவர்களை கில்பர்ட் என்பவர் தமது காரில் ஏற்றிக்கொண்டு சென்றதாகத் தெரிகிறது. கார் லவ்டேல் பாலம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், கார் நிலை தடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் கில்பர்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மாணவ மாணவிகள் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்த சுஷ்மிதா, ஜான் மைக்கேல் ஆகிய இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!