பேட் மேன் கதாபாத்திரம் உருவாகி 80 ஆண்டுகள் ஆனதை அமெரிக்க, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
1939ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் வெளியான காமிக் புத்தகத்தின் கதாபாத்திரம் பேட்மேன். மக்களை காக்கும் ரட்சகன் என்ற துணைப் பெயருடன் வலம் வந்த பேட்மேன், அவதரித்து 80 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பல நாடுகளில் பேட்மேன் ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.
சிறுவர் முதல் பெரியோர் வரை பேட்மேன் போல் வேடமணிந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர். 80ஆவது ஆண்டு நினைவாக ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓட்டப்பந்தயமும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் பேட் மேன் ஆடை அணிந்து ஓடி உற்சாகமடைந்தனர்.
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்?
“நிர்பயா நிதியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை”- மத்திய அரசு தரவுகள்..!
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
குழந்தையை கொன்ற தாயின் 2-வது கணவர்... மருத்துவ அறிக்கையால் சிக்கினார்..!