புத்தாண்டு தொலைக்காட்சி உரையில் அணுகுண்டு வீசுவோம் என அமெரிக்காவை வடகொரிய அதிபர் கிம் நேரடியாக மிரட்டியுள்ளார்.
புத்தாண்டையொட்டி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரை நிகழ்த்தினார். உரையில், நாங்கள் அணு ஆயுத சோதனையில் தன்னிறைவு அடைந்து விட்டோம். எனது மேஜை மீது ஒரு பொத்தானை பொருத்தி இருக்கிறார்கள். அதை அழுத்தி உலகின் எந்த நாட்டை வேண்டுமானாலும் அணு குண்டு மூலம் என்னால் தாக்க முடியும். முக்கியமாக அமெரிக்காவை தாக்க முடியும் என்றார்.
மேலும் இந்த ஆண்டு வடகொரியாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் குறித்தும் பேசினார். இந்த ஒலிம்பிக் போட்டியின் மூலம் மக்களுக்கு எங்கள் பலத்தை காட்டுவோம். உலகிற்கு நாங்கள் யார் என்று இனி தெரியும் என்று கூறினார்.
“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்
“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்?