பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக சந்தோஷ் என்ற வாலிபரை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(25). இவர் சத்யா பெண்ணை திருமணம் செய்து திருப்பூரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென கணவர் காணமல் போனதாக மனைவி சத்யா திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தோஷ் திருப்பூரை சேர்ந்த சசிகலா என்பவரை திருமணம் செய்து கொண்டு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் உடனடியாக சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தோஷ் ஏற்னவே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவதுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
ரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...! #TopNews
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்