மதுரை விசாலாட்சிபுரத்தை சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் அரசலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவ்வப்போது மதுரை பிபி.குளம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனிடையே நேற்று திடீரென உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். உடனே அங்கு பரிசோதனை செய்துள்ளனர். அதில் டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த நிலையில், மருத்துவர் பிருந்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனை மருத்துவரே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதி மக்களிடையே இச்சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இன்று காலை மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி தியாஷினி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருந்தார். அதனால், டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்
“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே
நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது
9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து
பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!
மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை
மின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..!
கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன? - அஸ்வின் கிண்டல்