ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டி புதூர் குமரன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ்வரன். இவர் விசைத்தறியில் கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை குடும்பத்தினருடன் உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
ரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...! #TopNews
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்