காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனுக்கு சேலம் அரசு மருத்துவமனை முறையான சிகிச்சை அளிக்காததால் கோமா நிலைக்கு சென்றதாக மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த மணிவண்ணன் - மைதிலி தம்பதியின் 5 வயது மகன் ஹரிகுகன், கடந்த செப்டம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால், மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் பெங்களூருவுக்கு சென்று சிறுவனை காப்பாற்றியதாகவும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
தற்போது சிறுவன் ஹரிகுகன் கோமா நிலையில் இருப்பதாகவும், மகனை காப்பாற்ற மேற்கொண்டு செலவு செய்ய வசதியில்லை எனவும் பெற்றோர் தெரிவித்தனர். இந்நிலையில், மகன் கோமா நிலைக்கு செல்ல காரணமான சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளிக்க சிறுவனுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோர் வந்தனர். அங்கு ஆட்சியரை சந்தித்து மனு அளித்த அவர்கள், சிறுவனை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்