நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ஜிஎஸ்டியுடன் சேர்த்து சேவைக்கட்டணம் வசூல் செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுக்கு முன் ஏசி இல்லாத வகுப்புக்கு ரூ.20. ஏசி வகுப்புக்கு ரூ.40 சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தணையை ஊக்கப்படுத்த 3 ஆண்டுகளுக்கு முன் சேவை கட்டணத்தை ரயில்வே நிறுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஏசி இல்லாத வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ15 ஏசி வகுப்புக்கு ரூ30 சேவைக்கட்டணத்துடன் ஜிஎஸ்டியும் வசூல் செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை
அப்போதும் இப்போதும் அதே "ஸ்டைல்": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்
தனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி!
'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்
நேர்முகத்தேர்வில் மோசடியா?: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி