தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி இணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயரில் செயல்படவுள்ளது.
வாராக்கடன் பிரச்சினையால் இந்திய பொதுத்துறை வங்கிகள் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், வங்கிகளை மறுகட்டமைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்படும் பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி இணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயரில் செயல்படவுள்ளது.
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியின் சார்பு வங்கியாக பல்லவன் கிராம வங்கி உள்ளது. மற்றொரு பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பு வங்கியாக பாண்டியன் வங்கி செயல்படுகிறது. இந்த இரண்டு வங்கிகளும் அடுத்த நிதியாண்டான ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒன்றிணைந்து, தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயரில் செயல்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 முதல் சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் என்றும் தெரிகிறது.
ராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்!
சட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்
வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்
காஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !