விளம்பர நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு தொடர்பாக, லதா ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.
கோச்சடையான் படத்துக்கு கொடுத்த கடன் தொகையில் ரூ.6.20 கோடி லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டுமெனக்கோரி, ஏட் பீரோ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதுதொடர்பாக வரும் 10ஆம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் விசாரணையை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதை மறுத்த லதா ரஜினிகாந்த், நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் லதா ரஜினிகாந்த் தரப்பு அறிவுறுத்தல் ஏதுமின்றி, அவரது தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தைப் பதிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான பிரச்னைக்குள் செல்லாமல், மனுக்களின் தகுதி மீதான விசாரணையை நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என நீதிபதிகள் கூறியுள்ளதாகவும் லதா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இறுதி விசாரணைக்காக வரும் 10ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு
சிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்
“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி
“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்
தமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !