அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற மணிகண்ட பிரபு இந்த வருடம் தான் பெற்ற பரிசுகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மொத்தம் 954 காளைகள் ஜல்லிக்கட்டிற்காக பதிவு செய்திருந்த நிலையில் 704 காளைகள் போட்டிக்கு வந்திருந்தன. அவற்றில் 61 காளைகள் பரிசோதனைக்கு பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், 643 காளைகள் வாடிவாசலில் இருந்து திறந்து விடப்பட்டன. மாலை 4 மணி வரை 430 காளைகள் களம் கண்டன. ஒரு சுற்றுக்கு 75 வீரர்கள் வீதம் மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்றன. பதிவு செய்திருந்த 623 மாடுபிடி வீரர்களில் 576 பேர் போட்டிக்கு வந்தனர். அவர்களில் 97 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்பு 479 பேர் களம் கண்டனர்.
போட்டியின் முடிவில் மணிகண்ட பிரபு என்பவர் முதல் பரிசு பெற்றார். கோடீஸ்வரன் மற்றும் சூர்யா இரண்டாவது பரிசும், பரத்குமார் மூன்றாவது பரிசும் பெற்றனர். களத்தில் நின்று விளையாடிய 5 காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றமணிகண்ட பிரபு இந்த வருடம் தான் பெற்ற பரிசுகளைஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
போட்டியின்போது மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 73 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களே பாராட்டி சென்றதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை
ஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் !
‘இன்னொரு அனிதாவை பறிகொடுக்கக்கூடாது என அன்றே முடிவெடுத்தேன்’.. ஜி.வி.யின் புதிய முயற்சி
‘எத்தனை முறைதான் லஞ்சம் கொடுக்க’.. நொந்துபோன இளைஞரால் வசமாக சிக்கிய அதிகாரிகள்..!
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்