தமிழகத்தில் மார்ச் முதல் அனைத்து சார்பதிவாளர்கள் அலுவலகங்களிலும் இடைத்தரகர்களுக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சொத்து வாங்குவோர், விற்பனை செய்வோர் மற்றும் சொத்திற்கு பாத்தியப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி இடைத்தரகர்கள் உள்ளே சென்றது கண்டுபிடிக்கப்பட்டால், காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிவுத்துறை எச்சரித்துள்ளது.
பதிவுத்துறையில் தரகர்களையும், ஊழல் நடவடிக்கைகளையும் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், இடைத்தரகர்களுக்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்