சென்னையில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், போலீஸ் எனக் கூறி துப்பாக்கி முனையில் இருவரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஒரு காரில் இருவர் வந்து கொண்டிருந்தனர். அந்த காரை, நான்கு கார்களில் வந்த 5 பேர் திடீரென வழி மறித்தனர். பின்னர் காரில் இருந்த இரண்டு நபர்களிடம், தாங்கள் போலீஸ் எனக்கூறி தலையில் தாக்கி துப்பாக்கி முனையில் மற்றொரு காரில் கடத்திச் சென்றனர். பட்டப்பகலில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, கடத்திச் செல்லப்பட்டவர்கள் யார்? கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தல் நடைபெற்றது என்று விசாரித்து வருகின்றனர். கடத்தலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் காவல்துறை சீருடை அணிந்திருந்ததாகவும், மற்ற நான்கு பேர் சாதாரண உடை அணிந்திருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்