அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சுடுமண்ணால் ஆன உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சுமார் ஒருமீட்டர் அகலமும் 15 அடி ஆழத்துடனும் அந்த உறைகிணறு காணப்பட்டது. இதனையறிந்த அங்கு சென்ற அதிகாரிகள், வரலாற்று பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்கு பின் பேசிய அதிகாரிகள், அந்த கிணறு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடிநீருக்காக பொதுமக்கள் பயன்படுத்தியது. இது சுடுமண்ணால் ஆன உறை கிணறு என்றும் இந்த கிணற்றில் இருப்பது சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைகளைகொண்டது என கூறினார். உறைகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் கொண்டது என தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய அனுமதி அளித்தால்ஆய்வு நடத்து முடியும் என தெரிவித்தனர். இந்த கிணற்றை பொதுமக்கள் பலரும் பார்த்து வியந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இது போன்ற வரலாற்று புகழ் பெற்ற பல அரிய பொருட்கள் இருக்கின்றது. இதனை பாதுகாக்கும் விதமாக இங்கு அகழ் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு
700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை
எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை
ஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் !
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்