பத்திரப்பதிவுக்கான தடை அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றவும், அங்கீரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்யவும் தடை விதித்து செப்டம்பர் 9 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், பலர் தகாத வார்த்தையில் பேசுவதாகவும், பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில், ஏற்கனவே இந்த வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் முறையிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகளிடம் யானை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.
யானை ராஜேந்திரனின் கோரிக்கையை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தலைமை நீதிபதி அனுமதியளித்தார். அப்போது, பத்திரப்பதிவு தடை உத்தரவானது ஒட்டுமொத்தமான தடை கிடையாது என்றும், அங்கீகாரமற்ற வீட்டுமனைகள், நிலங்களுக்கு மட்டுமே இந்த தடை உத்தரவு பொருந்தும் எனவும் தலைமை நீதிபதி விளக்கமளித்தார்.
தமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி!
“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..!
“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..!
திருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..!
பிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..!
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !