இந்தியா -பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதலிடத்தில் இருக்கிறது. பலம் வாய்ந்த இந்திய அணி, உள்நாட்டில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. கேப்டன் விராத் கோலி, மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, ரஹானே ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். உள்ளனர். பந்துவீச்சில் ஷமி, அஸ்வின், ஜடேஜா மிரட்டுகிறார்கள்.
பங்களாதேஷ் அணியின் மூத்த வீரர்கள் ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவுதான் என்றாலும் கடுமையாக போராடுவார்கள். ’ஷகிப் இல்லாதது அணியில் 2 வீரர்களை இழந்தது போல் உணர்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார், புதிய கேப்டன் மொமினுல் ஹக். அந்த அணியில் முஷிபிகுர் ரஹிம், மகமத்துல்லா, கேப்டன் ஹக் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர்.
இந்த மைதானத்தில் இதற்கு முன்பு நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை