தோனி போன்ற ஒரு வீரர், 30-40 வருடத்துக்கு ஒரு முறைதான் கிடைப்பார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. இதில் 71 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. அதே போல ஒரு நாளை தொடரையும் முதன்முறையாக வென்று சாதித்தது.
நேற்று நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் தோனி சிறப்பாக ஆடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது ஆட்டத்திறன் குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்தபோதும், அவர் தொடர்ந்து மூன்று ஆட்டங்களிலும் அரை சதம் அடித்தார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது.
இந்நிலையில் தோனி பற்றி, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனுக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், ‘’தோனி ஓய்வு பெற்றுவிட்டால் அவருக்கு பதில் யாரை களம் இறக்குவீர்கள் என்று கேட்கிறீர்கள். அவருக்கு இணையான வீரர் யாரும் இல்லை. அவருக்கு மாற்று இல்லை. அவரைப் போன்ற வீரர்கள் 30-40 வருடத்துக்கு ஒருமுறைதான் கிடைப்பார்கள். அவர் இல்லை என்றால் அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும்.
ரிஷாப் பன்ட் இருக்கிறார். ஆனால் தோனி போல் இன்னொருவர் வருவது கடினமானது. ரிஷாப்பின் ஹீரோவே தோனிதான். டெஸ்ட் தொடர் நடந்தபோது, ஒவ்வொரு நாளும் தோனியுடன் பேசிக்கொண்டே இருந்தார். அப்போது மற்ற வீரர்களை விட தோனியிடம் அதிகம் பேசிய வீரர் ரிஷாப்தான். இப்படிப்பட்ட மரியாதை முக்கியமானது. அதே போல விராத்துக்கும் தோனிக்கும் இடையிலுள்ள பரஸ்பர மரியாதையும் நம்ப முடியாததாக இருக்கிறது.
இதனால் டிரெஸ்டிங் ரூமில் எனது வேலை எளிதாகிறது. இந்திய அணிக்கு ஆட வேண்டும் என்றால் பயமில்லாமல் ஆட வேண்டும் என்பது கட்டாயம். மனதளவில் தயாராகி விட்டால் பிறகு ஏன் பயம் வேண்டும்?’’ என்றார்.
சுவர் எழுப்பும் விவகாரம் - தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப்
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே
பாலியல் வன்கொடுமை: கொலை செய்த இளைஞருக்கு சாகும்வரை தூக்கு
“பொதுமக்கள் போல் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல்” - சிஆர்பிஎப் அறிக்கை
“போதும்..போதும்.. மன்னிக்க முடியாத காட்டுமிராண்டி செயல் இது” - ரஜினி கடும் கண்டனம்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !