தென் மாநிலங்கள் அதிக வரி செலுத்தினாலும், குறைவான நிதியையே பெறுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
இதே கருத்தினை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்த நிலையில், அவருடன் சித்தராமையாயும் தற்போது இணைந்துவிட்டார்.
இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், “வரலாற்றில், வட மாநிலங்களுக்கு தொடர்ந்து தென் மாநிலங்கள் மானியங்களை அளித்து வருகின்றன. 6 தென் மாநிலங்களும் அதிக வரி செலுத்துகின்றன. ஆனால் குறைவாகவே நிதி பெறுகின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், உத்தர பிரதேச மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய் வரிக்கும், ரூ1.79 நிதி பெறுகிறது. ஆனால், கர்நாடாக மாநிலமோ ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், 47 பைசாதான் பெறுகிறது.
மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டிய தேவையை ஏற்றுக் கொள்ளும் வேளையில், நாங்கள் உருவாக்கிய வளர்ச்சிக்கான வெகுமதி எங்கே?. அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்” என்று கூறினார்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவும் இதே கருத்தினை தெரிவித்துள்ளார். தமிழத்தில் அதிமுகவும் தனது நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது.
சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..!
“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்
“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
கைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..!
தனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..! தந்தையாகவே கொண்டாடும் ஊர்மக்கள்..!
தெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..!
நாடாளுமன்றத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா..?