ஹைதராபாத்தில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் மீது மேசை விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
ஹைதராபாத் நகரின் குகட்பள்ளி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ருக்மணி(24). இவர் காவலாளியாக பணிபுரிகிறார். இவர் தன் இரண்டு குழந்தைகள், விக்ரம்(5) மற்றும் ரித்திக் ரோஷன்(4) உடன் சங்க ரெட்டி மாவட்டத்திலிருந்து 2015ஆம் ஆண்டு ஹைதராபாத்திற்கு வந்து குடியேறினார்.
கடந்த திங்கட்கிழமையன்று ரித்திக் ரோஷன் வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தான். ருக்மணி விக்ரம் உடன் வெளியே சென்றிருந்தார். அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரோஷன் மீது அருகில் இருந்த மர மேசை எதிர்பாராத விதமாக விழுந்தது. இதனால் அவருக்கு நெற்றி மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது.
இரண்டு மணி நேரம் கழித்து வீடு திரும்பிய ருக்மணியும் விக்ரமும் மேசை கீழ் சிக்கிக்கொண்டிருந்த ரோஷனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ரோஷன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனை, தற்செயலான மரண வழக்காக பதிவு செய்யப்பட்டது.
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!