ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி 106 நாட்கள் சிறையில் இருந்த ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் அக்டோபர் 22ம் தேதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால் அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை கைது செய்ததால் அவர் சிறையில் இருக்க நேரிட்டது.
இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தொடர்ந்த ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில் இன்று உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜாமீனையொட்டி ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
1. சாட்சிகளை கலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியிலோ ஈடுபடக்கூடாது.
2. ப.சிதம்பரம் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
3. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு குறித்து ப.சிதம்பரம் பேட்டி தரவோ, அறிக்கை விடவோ கூடாது.
4. அனுமதியின்றி ப.சிதம்பரம் பயணம் மேற்கொள்ளக்கூடாது.
5. வழக்கின் விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைப்பு தரவேண்டும்.
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!