இரண்டாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். இதன்காரணமாக இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டிற்கான இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமாக குறைந்துள்ளது.
மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி
ஏற்கெனவே இந்தாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது குறைந்து 4.5 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்த பொருளாதார வளர்ச்சி ஆகும். அரசின் தரவுகளின்படி உற்பத்தி துறையில் வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது. விவசாயம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது.
“பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரிடர்”- ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்..!
இந்த பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அடனு சக்ரபர்த்தி, “இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் நன்றாக தான் உள்ளது. பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் அதிகரிக்கும். அத்துடன் பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்) தனது அறிக்கையில் 2019-20ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. அதன்படி இந்திய பொருளாதாரம் அடுத்த காலாண்டில் வளர்ச்சி அடையும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து முன்னாள் பிரதமரும் பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ இந்திய பொருளாதாரத்தில் தற்போதைய நிலை மிகவும் பயப்படும் சூழலில் உள்ளது. முதலாம் காலாண்டிலிருந்த பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் மிகவும் குறைந்துள்ளது. இந்த நிலை இந்திய பொருளாதாரத்தில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய பொருளாதாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை எதுவும் தற்போது இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
‘இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும்’ - ரேட்டிங்கை குறைத்த மூடீஸ் நிறுவனம்
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!