சிக்கிம் மாநிலத்தின் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற பொதுத்தேர்தலுடன், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த திங்கட் கிழமை நடந்தது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக இரண்டு இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான சிகிம் கிரந்திகாரி மோர்ச்சா ஒரு இடத்தையும் கைப்பற்றியது.
போக்லாக்-கம்ராங் தொகுதியில் போட்டியிட்ட சிக்கிம் முதலமைச்சரும், சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சியின் வேட்பாளருமான பிரேம்சிங் தமாங் வெற்றி பெற்றார். மார்டம்-ரும்டெக் தொகுதியில் பாஜக வேட்பாளர் சோனம் ஷ் வென்சுங்பாவும், கேங்டாக் தொகுதியில் மற்றொரு பாஜக வேட்பாளர் யங் ஷேரிங் லெப்ச்சாவும் வெற்றி பெற்றனர். சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் பாஜக முதல்முறையாக வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்