சாலை விதிகளை மீறும் காவலர்களுக்கு அபராதம் இருமடங்காக வசூல் செய்யப்படும் என டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்தியாவில் நாள்தோறும் பலர் விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இதனால் வாகன சட்டங்களை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, புதிய வாகன சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவந்தது. அதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கு அபராத கட்டணத்தை பல மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது.
சமீபத்தில் அமலான புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி போலீசார் அபராதங்களை வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி டிஜிபி அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் காவலர்கள் சாலை விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
சாலை விதிகளை மீறும் காவலர்களுக்கு புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி உருவாக்கப்பட்ட அபராதத் தொகையை போல இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம் என புதிய விதி தெரிவிக்கிறது. ஆனால் காவலர்களாக இருந்தால் அது ரூ.10 ஆயிரமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு வாகனம் ஓட்டும்போதும், அல்லது சொந்த வாகனங்களை ஓட்டும் போதும் சாலை விதிகளை கடைபிடிப்பது கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்
“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி
28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்
பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு
குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!