வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய மசோதா மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் வெளிநாடுவாழ் இந்தியர்களை (NRI) திருமணம் செய்திருந்த பெண்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர். அதில் அவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் அவர்களை திருமணம் செய்துவிட்டு கொடுமை படுத்தியதாக தெரிவித்திருந்தனர். வெளியுரவுத் துறை அமைச்சகமும் கடந்த மூன்று ஆண்டுகளில் 4300 புகார்கள் வந்துள்ளதாக தகவலை வெளியிட்டிருந்தது. இதனால் மத்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்களில் கட்டுப்பாடு கொண்டுவரப் போவதாக தெரிவித்தது.
இந்நிலையில் மாநிலங்கள் அவையில் மத்திய வெளியுரவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய பெண்ணைத் திருமணம் செய்தால் திருமணமாகி 30 நாட்களுக்குள் அதைப் பதிவு செய்யவேண்டும். அத்துடன் இந்த மசோதா பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தமும் மேற்கொள்ளவிருக்கிறது. அதன்படி 30 நாட்களுக்குள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் திருமணத்தை பதிவுசெய்யாவிட்டால் அவர்களின் பாஸ்போர்ட் திரும்ப பெறப்படும்.
மேலும் இந்த மசோதா இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973லும் திருத்தம் கொண்டுவருகிறது. அதில் நீதிமன்றமங்கள் இந்திய வெளியுரவுத் துறையின் இணையதளத்தின் மூலம் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சம்மன் அனுப்பலாம் என்றிருக்கிறது. மேலும் வெளிநாடுவாழ் இந்தியர் நீதிமன்றத்தின் சம்மனிற்கு ஆஜாராகவில்லை என்றால் அவரது சொத்துகளையும் முடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றம் ஆஜராகாத வெளிநாடுவாழ் இந்தியரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவும் அறிவிக்கலாம் என்று இந்த மசோதா தெரிவித்துள்ளது.
இந்த மசோதாவை வெளியுரவுத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு, சட்ட அமைச்சகங்கள் கூட்டு முயற்சியாக உருவாக்கியுள்ளன. இதுகுறித்து வெளியுரவுத்துறை அமைச்சகம் “இந்த மசோதா அதிகமாக வரும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்கள் புகார்களுக்கு தக்க பதிலாக அமையும். மேலும் இம்மசோதாவின் மூலம் பெண்கள் தங்களின் வெளிநாடுவாழ் கணவர்களால் சந்திக்கும் இன்னல்கள் குறையும்” எனத் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு
சிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்
“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி
“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்
தமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !