பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதே என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெட்ரோல் விலை முதன்முறையாக ஒரு லிட்டர் 82 ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது. அதேபோல், டீசல் விலையும் உயர்ந்து 75 ரூபாய் 19 காசுகளாக விற்கப்படுகிறது.
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 81 ரூபாய் 92 காசுக்கு விற்ற நிலையில், இன்று 32 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 24 காசுகளாக விலை அதிகரித்துள்ளது. அதேபோல் 74 ரூபாய் 77 காசுகளாக விற்கப்பட்ட டீசல் இன்று 42 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 19 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவதே பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 98 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் 3 ரூபாய் 57 காசுகளும் உயர்ந்துள்ளது.
Read Also -> வானளாவிய அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஸ்டாலின் கடும் கண்டனம்
Read Also -> சென்னையில் முதல்முறையாக உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை..!
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதே என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், வெளிநாட்டு பிரச்னைகள் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்வதாக விளக்கினார். ஓபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகள் உறுதியளித்தபடி கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவில்லை என்றும் வெனிசுலா மற்றும் ஈரானில் நிலவும் பிரச்னைகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை பாதித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்றும் தெரிவித்தார். எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு தூதரக ரீதியில் அழுத்தம் கொடுத்து அதன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்
சட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்
வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்
காஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்
பரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி!
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !