ஐ.டி. நிறுவனங்களில் 3 ஆண்டுகளுக்குள் 6 லட்சம் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஹெட் ஹண்டர்ஸ் என்ற முன்னணி நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மிகாந்த், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த ஆண்டு 56 ஆயிரம் ஐ.டி. பணியாளர்கள் வேலைஇழக்க இருப்பதாகத் தெரிவித்தார். உண்மையில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 75 லட்சம் பணியாளர்கள் முதல் 2 லட்சம் பணியாளர்கள் வரையில் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும், இதன் மூலம் 5 லட்சம் முதல் 6 லட்சம் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளாத ஐ.டி. ஊழியர்களே பணியிழக்க நேரிடும் என்றும் லக்ஷ்மிகாந்த் தெரிவித்துள்ளார்.
“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..!
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!
சென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா ?
ஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை ! #Topnews