வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு ரூ.4 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட் தாக்கலாகும்போது நடுத்தர மக்களின் எதிர்பார்பாக இருப்பது, இந்தாண்டாவது வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்பதே ஆகும். கடந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதே அதன் வரம்பு ரூபாய் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால் நிதியமைச்சர் அருண்ஜேட்லி அதுகுறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் பட்ஜெட் உரையை முடித்துக்கொண்டார். இதனால் வருமான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு தற்போது ரூ.2.5 லட்சமாகவே உள்ளது.
இந்நிலையில் 2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் வருமான வரி உச்சவரம்பு ரூ.4 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நிதிநிலை அறிக்கைத் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவும், பொருட்கள் விலையேற்றம் போன்றவற்றை கருத்தில் கொண்டு வருமான வரி உச்சவரம்பை ரூ 5.லட்சம் வரை படிப்படியாக உயர்த்தலாம் என்றும், உடனடியாக ரூ3.லட்சம் வரை உயர்த்தி அறிவிப்பு வெளியிடலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்தாண்டின் பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு நிச்சயம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் மட்டுமல்ல பொன்னேரியிலும் 5 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை
9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: தோப்புக்குள் சிக்கினார் போலீஸ் ஏட்டு !
கிறிஸ் கெயில் அபார சதம்: ஐதராபாத் வேகத்தைக் குறைத்தது பஞ்சாப்!
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: மாறுவேடத்தில் அதிரடி காட்டிய போலீஸ்
18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்