உசிலம்பட்டி அருகே காதலித்த பெண்ணை திருமனம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆயுதப்படைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி காலணியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு திருமணம் முடித்து வைக்குமாறும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது விடுமுறை காரணமாக சொந்த ஊரான நக்கலப்பட்டிக்கு வந்த சதீஸ் மீண்டும் பெற்றோரிடம் காதலித்த பெண்ணை திருமணம் முடித்து வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மீண்டும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காவலர் சதீஸ் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். நாளை பிப்-14 உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்!
சட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்
வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்
காஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !