சினிமா போல வாழ்க்கையையும் நினைத்தீர்களா? என்று நடிகர் ஜெய்யிடம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
திரைப்பட நடிகர் ஜெய் கடந்த 21ஆம் தேதி குடிபோதையில் காரை ஓட்டி சென்னை அடையாறு மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தினர். அது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகாததால் 2 நாட்களில் கைது செய்து ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அவரை கைது செய்யச் சென்ற காவல்துறையினர் ஜெய் தலைமறைவாகிவிட்டார் என தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெய் சரணடைந்தார்.
அவரிடம் வாழ்க்கையையும் சினிமா போல நினைத்தீர்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதி காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என கேட்டார். அதற்கு ஜெய் ஆம் என்று பதிலளித்தார். அதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார் நீதிபதி.
தமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி!
“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..!
“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..!
திருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..!
பிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..!
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !