வேளச்சேரி: ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு

வேளச்சேரி: ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு
வேளச்சேரி: ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு

ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, வேளச்சேரி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வேளச்சேரி தொகுதியில் கடந்த 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், 92-வது வாக்குச் சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்களை மாநகராட்சி ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், அந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் நாளை காலை 7 மணி முதல் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த வாக்குச்சாவடியில் தேர்தல் பார்வையாளர் சர்மா மற்றும் தேர்தல் அதிகாரி கணேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், வாக்குப் பதிவு நடைபெறும் மையத்துக்கு, திருவான்மியூரில் உள்ள ஓர் பள்ளியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு இடதுகை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com