தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2 - 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.
மூன்றாவது ஒருநாள் போட்டியை 28 ரன்களில் வென்று அதன் மூலம் தொடரையும் கைபற்றியுள்ளது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 320 ரன்களை குவித்தது. ஃபக்கர் ஜாமன் 101 ரன் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 292 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 94 ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். சிறப்பாக விளையாடி மூன்று போட்டிகளையும் சேர்த்து 302 ரன்களை குவித்த பாக்கர் ஜாமன் தொடர் நாயகன் விருதை வென்றார்.
முதல் போட்டியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், இரண்டாவது போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இரண்டாவது போட்டியில் அணியை வெற்றி கோட்டுக்கு அருகே கொண்டு சென்று ரன் அவுட்டாகி வெளியேறினார் ஃபாக்கர் ஜாமன். அந்த அவுட் சர்ச்சையானதும் குறிப்பிடத்தக்கது.