போடி: வாக்குச்சாவடி அருகே கடைக்காரரை தாக்கியதால் போலீஸார் மீது தாக்குதல்

போடி: வாக்குச்சாவடி அருகே கடைக்காரரை தாக்கியதால் போலீஸார் மீது தாக்குதல்
போடி: வாக்குச்சாவடி அருகே கடைக்காரரை தாக்கியதால் போலீஸார் மீது தாக்குதல்

போடி அருகே குண்டல்நாயக்கம்பட்டியில் போலீஸார் மீது தாக்கல் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியான போடி தொகுதியில் ஓ.பி.எஸ் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. போடி தொகுதிக்குட்பட்ட குண்டல்நாயக்கம்பட்டி வாக்குச்சாவடிக்கு அருகே ஒரு கடை திறந்துள்ளதாகவும், அதை அடைக்கும்படி போலீஸார் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

வாக்குவாதம் முற்றியபோது, போலீஸார் முதலில் கடைக்காரரை தாக்கியிருக்கிறார். இதனால் அங்கிருந்த திமுகவினர் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததால் அந்தப் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் முதற்கட்டமாக போலீஸார் 3 பேர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com