சாயல்குடியில் 71 அரிசி சிப்பங்கள் பறிமுதல்: திமுகவினரிடம் பறக்கும் படை விசாரணை!

சாயல்குடியில் 71 அரிசி சிப்பங்கள் பறிமுதல்: திமுகவினரிடம் பறக்கும் படை விசாரணை!
சாயல்குடியில் 71 அரிசி சிப்பங்கள் பறிமுதல்: திமுகவினரிடம் பறக்கும் படை விசாரணை!

சாயல்குடியில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த 71 அரிசி சிப்பங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திமுகவினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு அரிசி பைகள் வழங்குவதாக மாவட்ட தேர்தல் மைய கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. அதனடிப்படையில் விரைந்து சென்ற முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சேகர் தலைமையிலான குழுவினர் சாயல்குடி பேரூராட்சி சமுதாய கூடத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சாயல்குடி பேரூராட்சி 12-வது வார்டு திமுக செயலாளர் சசிகுமார் என்பவர் பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கள்ளச்சாவி மூலம் சமுதாயக் கூடத்தை திறந்து, அங்கு அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 71 அரிசி சிப்பங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com