முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு கொரோனா உறுதி

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு கொரோனா உறுதி
முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு கொரோனா உறுதி

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54,480 ஆக உள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,52,566 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கோரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி 354 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,62,468 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மனைவி சென்னம்மாவும் நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். கடந்த சில நாட்களாக எங்களுடன் தொடர்பு கொண்ட அனைவருமே தங்களை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்சி ஊழியர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com