கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக முக்கிய நகரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தியது மத்திய பிரதேச அரசு.
அதன்படி வரும் மார்ச் 31 ஆம் தேதி வரையிலான ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் போபால், இந்தூர் மற்றும் ஜபல்பூரில் ஊரடங்கை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் முதல் முறையாக இன்று மத்திய பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.