"234 தொகுதியில் தனித்து நிற்போம்... தன்மானம் காப்போம்" - ஓசூர் காங்கிரஸாரின் பதிவு

"234 தொகுதியில் தனித்து நிற்போம்... தன்மானம் காப்போம்" - ஓசூர் காங்கிரஸாரின் பதிவு
"234 தொகுதியில் தனித்து நிற்போம்... தன்மானம் காப்போம்" - ஓசூர் காங்கிரஸாரின் பதிவு

ஒசூரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளங்களில், ஒரு கை பார்ப்போம் 41 தொகுதி கேட்போம் இல்லை என்றால் 234 தொகுதிகளில் தனித்து நிற்போம் தன்மானம் காப்போம் என போஸ்டர் பதிவிட்டுள்ளார். இது திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளன.

ஆனால் திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராமால் இழுபறியாக நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஒபிசி பிரிவு மாவட்ட தலைவர் வி.குமார் (எ) ரவிகுமார் என்பவர் தன் பேஸ்புக் முகநூல் பக்கத்தில் சோனியா காந்தி பிரியங்கா காந்தி ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் சின்னமான கை சின்னத்தை பதிவிட்டு அந்த போஸ்டரில் வாங்க ஒரு கை பாப்போம் 41 தொகுதி கேட்போம் இல்லை என்றால் 234 தொகுதியில் தனித்து நிற்போம் தன்மானம் காப்போம் என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் இது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது திமுக கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com