விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு!

விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு!
விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு!

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுமாறு போராடி வரும் விவசாய சங்கங்களை இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

டிசம்பர் 3-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு திட்டமிட்டிருந்த நிலையில் அது தற்போது 2 நாட்களுக்கு முன்பே நடத்தப்படுகிறது. கொரோனா பரவலையும் கடும் குளிரையும் கருதி பேச்சுவார்த்தை முன்கூட்டியே நடத்தப்படுவதாக விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 3 மணிக்கு டெல்லி விஞ்ஞான் பவனுக்கு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு 32 விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி விவசாய சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே டிசம்பர் 3ஆம் தேதி மீண்டும் பேச்சு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com